என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தனியார் கலை அறிவியல் கல்லூரி
நீங்கள் தேடியது "தனியார் கலை அறிவியல் கல்லூரி"
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளரை கண்டித்து எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கல்லூரி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையம்:
கோவையை அடுத்த சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லுரியின் தாளாளர் அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
அந்த பெண் ஊழியர் கல்லூரி அலுவலகத்திற்குள் வரும் போது, தாளாளர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்றும், அந்த பெண் ஊழியர் நழுவி செல்வது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலியல் தொந்தரவு தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் ஊழியர் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளரை கண்டித்து எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கல்லூரி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரிக்கு நேற்று மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரியில் இருந்து வெளியே வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
அந்த நேரத்தில் கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றி கொண்டு கல்லூரிக்கு சொந்தமான 15 பஸ்கள் வரிசையாக வந்தது. அந்த பஸ்களை மாணவ- மாணவிகள் சிறை பிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் பஸ்களை விடுவித்து மாணவ- மாணவிகளை அங்கிருந்து கலைந்து செல்லும் படி கூறினார்கள்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தின் போது கல்லூரி அலுவலகம் மீது கல் வீசப்பட்டது. இதில் அலுவலகத்தில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது.
பாலியல் தொந்தரவு குறித்து பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். அதில் கல்லூரி தாளாளர் என்னிடம் ஆபாச வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்றார். அவரிடம் விசாரணை நடத்தி கடுமையாக எச்சரிக்கை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இந்த புகாரை துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் பெற்று கொண்டு புகாருக்கான ரசீது (சி.எஸ்.ஆர்.) வழங்கியதுடன் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது, வீடியோ காட்சிக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை. போலீஸ் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம் என்று தெரிவித்தனர்.
கோவையை அடுத்த சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லுரியின் தாளாளர் அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
அந்த பெண் ஊழியர் கல்லூரி அலுவலகத்திற்குள் வரும் போது, தாளாளர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்றும், அந்த பெண் ஊழியர் நழுவி செல்வது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலியல் தொந்தரவு தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் ஊழியர் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளரை கண்டித்து எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கல்லூரி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரிக்கு நேற்று மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரியில் இருந்து வெளியே வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
அந்த நேரத்தில் கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றி கொண்டு கல்லூரிக்கு சொந்தமான 15 பஸ்கள் வரிசையாக வந்தது. அந்த பஸ்களை மாணவ- மாணவிகள் சிறை பிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் பஸ்களை விடுவித்து மாணவ- மாணவிகளை அங்கிருந்து கலைந்து செல்லும் படி கூறினார்கள்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தின் போது கல்லூரி அலுவலகம் மீது கல் வீசப்பட்டது. இதில் அலுவலகத்தில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது.
பாலியல் தொந்தரவு குறித்து பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். அதில் கல்லூரி தாளாளர் என்னிடம் ஆபாச வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்றார். அவரிடம் விசாரணை நடத்தி கடுமையாக எச்சரிக்கை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இந்த புகாரை துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் பெற்று கொண்டு புகாருக்கான ரசீது (சி.எஸ்.ஆர்.) வழங்கியதுடன் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது, வீடியோ காட்சிக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை. போலீஸ் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம் என்று தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X